Friday, March 11, 2011

எண்ணுவது உயர்வு - கதை

எண்ணுவது உயர்வு - கதை
உயர்வான எண்ணங்களோடு எப்போதும் இருக்க வேண்டும்.

மலையடிவாரத்தில் காகமும், புறாவும் நெடுநாட்களாக தவம் செய்து கொண்டிருந்தன.அவைகளைப் பார்த்த இறைவன் மனம் இரங்கினார். அந்த மலையடிவாரத்தில் காட்சியளித்தார்.இறைவனை தங்கள் கண் முன்னே கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.பறவைகளே உங்கள் தவத்தைக் கண்டு என்மனம் இரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்.உடனே காகம் இறைவா எனது கருமை நிறம் மாறி என்உடல் பொன்னிறமாக மாற வேண்டும். என் பொன்நிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.இறைவன் உடனே புறாவைப் பார்த்தார் புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது.அன்பும் இல்லாமல் இரக்கமும் இல்லாமல் பல கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லாமக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன் என்று கூறியவாறு காகத்தைப் பார்த்தார்.காகமே உனக்கும் உனது எண்ணப்படியே வரம் தந்தேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்நிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்தது.புறாவிடம் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு பறந்து சென்றது.புறா உற்சாகமடைந்தது. மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது. புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக்கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல் அறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு சுவையான உணவு வகைகள் கிடைத்தன. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு அதனை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தது.பொன்னிறமாக மாறிய காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தை அம்பால் எய்து பிடித்துச் சென்றான்.வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது கீழ் தரமான எண்ணத்தால் பேராசை பிடித்து இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே.. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்த துன்பம் நேர்ந்திருக்காதே இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவா¢ன் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடையலாம் என்பதை இப்போது பு¡¢ந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.எண்ணத்தால் வாழ்க்கை அமைவதால். நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்

No comments:

Post a Comment