Friday, March 11, 2011

சிலம்பாட்டம்

சிலம்பாட்டம்

கதிரவன் வெப்பத்துடன் மேகங்கள் பின் மறைந்து கொண்டான். சிறிது நேரத்தில் ‘சில் சில்’ என்று காற்று வீசியது. இயற்கை தாய் தன் அன்பு செல்வங்களை அனைத்து மகிழ்ந்தாள். அங்கிருந்த மரங்கள் காற்றுக்கு நடனம் ஆடின. அப்போது ரவி அங்கே இயற்கையை ரசித்து நடந்து கொண்டிருந்தான். அங்கே இருந்த சிலம்பாட்ட சுவரோட்டி அவன் கண்களை இழுத்தது. அதை படித்ததும் அவன் உச்சி குளிர்ந்தான். அவனுக்கு எப்போதும் சிலம்பாட்டத்தில் ஆர்வம் அதிகம்.
மின்னல் தோற்க ரவி வீட்டிற்கு ஓடினான். சிலம்பாட்ட வகுப்பை பற்றி தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, அதில் படிக்க தனக்கு ஆசை என்று கூறினான். அவனின் பெற்றோரும், அவன் ஆர்வமறிந்து சிலம்பாட்ட வகுப்பில் சேர்த்து விட்டார்கள். சில மாதங்களில், ரவியின் சிலம்பாட்டத்தேர்வும் வந்தது. அதில் மிகவும் நன்றாக செய்து, வகுப்பில் முதலாக வந்தான். ஆசிரியர் அவனை பாராட்டி சான்றிதழை கொடுத்தார். ரவிக்கு அப்போது கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சி. அவன் மனம் சாதனையில் பூரித்தது.
அன்று சான்றிதழை கொடுக்கும் விழா சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. அன்றிரவு,  நிலவு தன் ஒளி கற்றைகளை, இலை, செடி கொடிகளை தாண்டி தன் படைபரிவாரங்களான நட்சத்திரங்களுடன் காரிருள் மேகத்தினூடே பள பள வென்று ஜொலித்தது. இருந்தாலும் தெரு இருளோடி இருந்தது, திடிரென, அவ்விருளை கிழித்து கொண்டு ஒரு பயமுறுத்தும் குரல் ரவியை மிரட்டியது. ரவியின் பணப்பையை பறிக்க முயன்றது. கையில் கத்தியோடு வந்த உருவத்தை பார்த்த ரவியின் உள்ளம் ஒருகணம் திடுக்கிட்டது. மறுகணம், ரவிக்கு ஆசிரியர் அவனுக்கு கற்பித்த பாடம் நினைவுக்கு வந்தது. தைரியமாக, மர்ம உருவம் தன் முன் நீட்டிய, கத்தியை தட்டி விட்டு, சிலம்ப பயிற்சியில் கற்ற தற்காப்புகலையை செயல்படுத்தினான். இதை எதிர்பர்க்காத திருடன் அச்சம் அடைந்து அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான். தற்காப்பு கலை எவ்வளவு முக்கியம் என்பதை கண்கூடாக உணர்ந்த ரவி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு நடை போட்டான்.

No comments:

Post a Comment